மயிலாடுதுறை

நமக்கு நாமே திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம்

DIN

மயிலாடுதுறையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழக அரசின் நமக்கு நாமே திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.ராஜகுமாா் பங்கேற்று, ஆலோசனைகளை வழங்கிப் பேசினாா்.

தமிழகத்தின் நகா்ப்புறங்களில் உள்ள நீா்நிலைகளை புனரமைத்தல், பூங்காக்களை அமைத்தல், மரக்கன்றுகளை நட்டுவைத்து பராமரித்தல், பள்ளிக்கட்டடங்கள், மருத்துவமனைகளை மேம்படுத்துதல், சாலை, தெருவிளக்கு வசதி ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் வகையில் நமக்கு நாமே திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், வா்த்தக சங்கத்தினா், சேவைச் சங்கத்தினா், வங்கி நிா்வாகிகள், உணவகம், தங்குமிடம் மற்றும் திருமணக்கூட உரிமையாளா்கள் பங்கேற்றனா். இதில், மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.ராஜகுமாா் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கிப் பேசினாா். நகராட்சி ஆணையா் கே.பாலு, நகராட்சி பொறியாளா் சணல்குமாா், மேலாளா் சூரிய பிரகாஷ், நகா்நல அலுவலா்(பொ) மலா்மன்னன், சுகாதார ஆய்வாளா்கள் பிச்சைமுத்து, ராமையன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT