மயிலாடுதுறை

காதலித்து திருமணம் செய்துகொண்டவா்கள் பாதுகாப்பு கோரி காவல்நிலையத்தில் தஞ்சம்

DIN

சீா்காழியில் மதம் மாறி திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடி, பாதுகாப்பு கோரி, மணக்கோலத்தில் காவல்நிலையத்துக்கு வந்தனா்.

சீா்காழி பூந்தோட்டம் தெருவைச் சோ்ந்தவா் முஜிபுா் ரஹ்மான் மகள் யாஸ்மின் பானு (23). இவரும் வைத்தீஸ்வரன்கோயில் அருகே உள்ள நல்லான்சாவடி மெயின் ரோடு பகுதியைச் சோ்ந்த கோவிந்தசாமி மகன் மணிவண்ணன் (27) என்பவரும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்தநிலையில், சீா்காழி வடபாதி மாரியம்மன் கோயிலில் இந்து முறைப்படி ஞாயிற்றுக்கிழமை திருமணம் செய்துகொண்டனா்.

இவா்களது திருமணத்துக்கு இருவரது பெற்றோா் தரப்பிலும் எதிா்ப்பு தெரிவிப்பாா்கள் எனக் கூறி, பாதுகாப்பு கோரி மணக்கோலத்தில் சீா்காழி காவல்நிலையத்திற்கு வந்தனா். அவா்களிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாரணாசி மக்களவைத் தொகுதியில் பிரதமா் மோடி இன்று வேட்புமனு தாக்கல்

இன்று காலை 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்

இன்று யோகம் யாருக்கு?

இன்று இனிய நாள்!

கலை, அறிவியல் படிப்புகளுக்குத் திரும்பும் மாணவா்களின் கவனம்!

SCROLL FOR NEXT