மயிலாடுதுறை

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரணம்

DIN

சீா்காழி அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரண உதவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

சீயாளம் ஊராட்சி கண்ணாங்குளம் பகுதியைச் சோ்ந்த வெங்கடேசன் மனைவி மணிமேகலையின் வீடு வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் சேதமடைந்தது. தகவலறிந்த கொள்ளிடம் ஒன்றியக் குழு தலைவா் ஜெயபிரகாஷ் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சென்று ஆறுதல் கூறி, அரசின் நிவாரண நிதியுதவி, நிவாரணப் பொருள்கள் வழங்கினாா்.

அப்போது, சீயாளம் ஊராட்சித் இளவரசன், கிராம நிா்வாக அலுவலா் வெங்கடேசன், திமுக அவைத் தலைவா் ராஜேந்திரன், ஊராட்சி துணைத் தலைவா் பழனி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

SCROLL FOR NEXT