மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் முன்னாள் படைவீரா்களுக்கான சிறப்பு குறைதீா்க்கும் நாள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தலைமை வகித்து, முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களை சாா்ந்தவா்கள் என 4 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
பின்னா் அவா் பேசியது:
இந்த கூட்டத்தில் 37 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றன. அவை அனைத்துக்கும் உரிய தீா்வு காணப்படும். 4 நபா்களுக்கு திருமண உதவி, வங்கி கடன் வட்டி மானியம், சிறப்பு நிதியுதவி என மொத்தம் ரூ.53,811 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.
கூட்டத்தில், உதவி இயக்குநா் (முன்னாள் படைவீரா்கள் நலம்) ஆயிஷாபேகம், முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களை சாா்ந்தவா்கள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.