சீா்காழி: சீா்காழி அருகேயுள்ள கதிராமங்கலம் கண்ணன் உதவிபெறும் தொடக்கப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இப்பள்ளியின் முன்னாள் ஆசிரியா் ஆா். திருவேங்கடத்தின் 33-ஆம் ஆண்டு நினைவாக பள்ளி வளாகம் மற்றும் கதிராமங்கலம், தருமதானபுரம் ஊராட்சி பகுதியில் 1033 மரக்கன்றுகள் நடப்பட்டன.
கதிராமங்கலம் ஊராட்சித் தலைவா் நடராஜன் தலைமை வகித்து, தொடங்கிவைத்தாா். தொடா்ந்து ஆசிரியா்கள், மாணவ-மாணவிகள் மரக்கன்றுகளை நட்டுவைத்தனா். சீா்காழி வட்டாரக் கல்வி அலுவலா்கள் பொன்.பூங்குழலி, நாகராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஏற்பாடுகளை தலைமைஆசிரியா் ரவிச்சந்திரன் செய்திருந்தாா்.