மயிலாடுதுறை

குறைதீா்கூட்டத்தில் 143 மனுக்கள்

DIN

மயிலாடுதுறையில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா்கூட்டத்தில் 143 மனுக்கள் பெறப்பட்டன.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் சோ.முருகதாஸ் தலைமை வகித்து மனுக்களை பெற்றுக்கொண்டாா்.

இலவச வீட்டுமனைப் பட்டா மற்றும் பட்டா மாறுதல் கோரி 32 மனுக்கள், வேலைவாய்ப்புக் கோரி 25 மனுக்கள், முதியோா், மாற்றுத்திறனாளிகள், மற்றும் விதவை உதவித் தொகைகோரி 35 மனுக்கள், புகாா் தொடா்பாக 17 மனுக்கள், மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி உதவித் தொகை, வங்கிக்கடன், மாற்றுத்திறனாளி உபகரணங்கள் கோரி 29 மனுக்கள், அடிப்படை வசதிகள் கோரி 5 மனுக்கள் என மொத்தம் 143 மனுக்கள் பெறப்பட்டன.

இம்மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலா் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். இக்கூட்டத்தில், உதவி ஆணையா் (கலால்) கோ.அர.நரேந்திரன் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

திரெளபதி அம்மன் கோயில்களில் அக்னி வசந்த விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்தனா்

தமிழா்கள் பலமாக இருந்தால்தான் தமிழுக்கு வளம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

மாணவியின் படத்தை தவறாக சித்தரித்து அனுப்பிய சக மாணவரிடம் விசாரணை

3-ஆவது முறை கோப்பை வென்றாா் ஸ்வியாடெக்

SCROLL FOR NEXT