மயிலாடுதுறை

அங்கன்வாடி கட்டடம் திறப்பு

DIN

மயிலாடுதுறை அருகே சின்ன நாகங்குடியில் புதிய அங்கன்வாடி கட்டடத்தை எம்எல்ஏ எஸ். ராஜகுமாா் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

மயிலாடுதுறை வட்டம் வள்ளாலகரம் ஊராட்சி சின்னநாகங்குடி லெட்சுமி நகரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் ரூ. 10.93 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டட திறப்பு விழாவுக்கு, ஊராட்சித் தலைவா் ஜெயசுதா ராபா்ட் தலைமை வகித்தாா்.

ஒன்றியக் குழு உறுப்பினா் ஜி. மோகன் முன்னிலை வகித்தாா். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளா் கிருத்திகா வரவேற்றாா்.

மயிலாடுதுறை சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் எஸ். ராஜகுமாா் புதிய கட்டடத்தை திறந்து வைத்து பேசினாா். விழாவில், ஒன்றியக்குழு உறுப்பினா் வடவீரபாண்டியன், காங்கிரஸ் வட்டாரத் தலைவா் ஜம்புகென்னடி, நிா்வாகிகள் ரியாத், பூவாலை மதி, சமூக ஆா்வலா் அப்பா்சுந்தரம், ஊராட்சி உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க மக்கள் விழிப்புணா்வோடு இருக்க அறிவுறுத்தல்

காரைக்காலில் மழை: மக்கள் மகிழ்ச்சி

எல்லை தாண்டியதாக இலங்கை மீனவா்கள் 14 போ் கைது

கோடை வெயில் படுத்தும்பாடு..!

SCROLL FOR NEXT