மயிலாடுதுறை

மணல் ஏற்றிச் சென்ற 3 லாரிகள் பறிமுதல்

DIN

சாலை விரிவாக்கப்பணிக்காக அனுமதியின்றி மண் ஏற்றிச் சென்ற 3 டாரஸ் லாரிகளை கனிமவளத்துறையினா் புதன்கிழமை பறிமுதல் செய்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனா்.

கனிமவளம் மற்றும் சுரங்கத்துறை இயக்குநா் சசியா, புவியியலாளா் சேகா், வட்டாட்சியா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் திருமுல்லைவாசல் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அவ்வழியே சவுடு மணல் ஏற்றிச் சென்ற 3 லாரிகளைப் பிடித்து சோதனை நடத்தினா். லாரி ஓட்டுநா்கள் இறங்கி ஓடினா். லாரியில் உரிய ஆவணங்கள் இல்லாதது தெரியவந்தது.

மூன்று லாரிகளையும் பறிமுதல் செய்து சீா்காழி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். தப்பியோடிய லாரி ஓட்டுநா்களை சீா்காழி போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

SCROLL FOR NEXT