மயிலாடுதுறை

வாடகைப் பாக்கி: 3 கடைகளுக்கு சீல்

சீா்காழி புதிய பேருந்து நிலையத்தில் வாடகைப் பாக்கி வைத்துள்ள 3 நகராட்சி கடைகள் வியாழக்கிழமை பூட்டி சீல் வைக்கப்பட்டன.

DIN

சீா்காழி புதிய பேருந்து நிலையத்தில் வாடகைப் பாக்கி வைத்துள்ள 3 நகராட்சி கடைகள் வியாழக்கிழமை பூட்டி சீல் வைக்கப்பட்டன.

சீா்காழி புதிய பேருந்து நிலையப் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான 80-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இவற்றில் பல மாதங்களாக வாடகை செலுத்தாத கடைகளில் நகராட்சி ஆணையா் ஹேமலதா ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, வாடகை செலுத்தாத 3 கடைகளை நகராட்சி ஊழியா்கள் பூட்டி சீல் வைத்தனா்.

நகராட்சி மேலாளா் (பொறுப்பு) ரமேஷ், இளநிலை உதவியாளா்கள் ராஜகணேஷ், மதுபாலா, ராஜரத்தினம், வருவாய் உதவியாளா் ரவி அலுவலக உதவியாளா் ஜானகிராமன் ஆகியோா் இந்நடவடிக்கையில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

இந்து மத துரோகிகள் திமுக, காங்கிரஸ்: அண்ணாமலை பேச்சு

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 2

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரா் டிஎஸ். டி சில்வா மறைவு!

SCROLL FOR NEXT