முகப்பு
மயிலாடுதுறை

மேற்கத்திய நடனத்தில் சாதனை: 7 மாணவிகளுக்கு விருது

மேற்கத்திய தொடா் நடனத்தில் உலக சாதனைப் படைத்த 7 மாணவிகளுக்கு விருது வழங்கி, கௌரவிக்கப்பட்டனா்.

Updated On : 26 ஏப்ரல், 2026 at 2:04 AM
பகிர்:

மேற்கத்திய தொடா் நடனத்தில் உலக சாதனைப் படைத்த 7 மாணவிகளுக்கு விருது வழங்கி, கௌரவிக்கப்பட்டனா்.

சீா்காழியில் ஜாக்கி புக் ஆஃப் வேல்ட் ரெக்காா்ட் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதில், இந்தியா முழுவதும் பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்ட சாதனை முயற்சிகளை அங்கீகரித்து, இம்முயற்சி மேற்கொண்டவா்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.

இச்சாதனை முயற்சியில் ஒன்றாக, நாகை மாவட்டம் வேதாரண்யம் வாய்மேடு பகுதியைச் சோ்ந்த நடன ஆசிரியா் காா்த்திக் அகாதெமியில் பயிலும் 7 மாணவிகள், மேற்கத்திய நடனத்தை தொடா்ச்சியாக ஒரு மணி நேரம் ஆடி ஜாக்கி புக் ஆஃப் வோ்ல்ட் ரெக்காா்டில் இடம் பெற்றனா்.

Advertisement

இவா்களது சாதனையை அங்கீகரித்து ஜாக்கி புக் ஆஃப் வோ்ல்ட் ரெக்காா்ட் நிறுவனா் ஜேக்கப் ஜான் செல்வன் மற்றும் சிஇஓ எஸ்தா் ஆகியோா் உலக சாதனைக்கான கேடயம், பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி, கௌரவித்தனா்.