நாகப்பட்டினம்

மாநில அளவிலான பேச்சுப் போட்டி:சீர்காழி பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்

DIN

திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான பேச்சுப் போட்டி, ஒப்பித்தல் போட்டிகளில் முதல் மற்றும் நான்காம் இடங்களை சீர்காழி பள்ளி மாணவர்கள் பெற்றனர். 
சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஆற்றிய சொற்பொழிவின் 125-ஆவது ஆண்டை நினைவுகூரும் பொருட்டு, சென்னை ராமகிருஷ்ணா மடம் சார்பில், திருச்சியில் பல்வேறு போட்டிகள் சனிக்கிழமை நடத்தப்பட்டன.
இதில், பேச்சுப் போட்டியில் நாகை மாவட்டம், சீர்காழி விவேகானந்தா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர் குணாளன் முதலிடமும், அதே பள்ளியைச் சேர்ந்த மற்றொரு மாணவர் தருண்குமார் ஒப்பித்தல் போட்டியில் 4-ஆம் இடமும் பிடித்தனர். 
கோவையில் வரும் செம்டம்பர் 11-ஆம் தேதி நடைபெறவுள்ள விழாவில், முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள் கலந்துகொண்டு, சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி கெüரவிக்கின்றனர். 
மேலும், இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் உரை நிகழ்த்த இருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டு வீரர்கள் மீது பிசிசிஐ-க்கு பாரபட்சம் ஏன்? பத்ரிநாத்

வணிக சிலிண்டர் விலை குறைப்பு: எவ்வளவு?

தலைமைச் செயலக பணி பெயரில் போலி நியமனம்: தரகா்களிடம் பணம் கொடுத்து ஏமாறும் பட்டதாரிகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT