நாகப்பட்டினம்

மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடி கைது

DIN

குத்தாலம் அருகே மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடியை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
திருவாலங்காட்டை அடுத்த மாம்புள்ளி கிராமம், கீழத்தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்துவின் மகன் ராமலிங்கம் (31). இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் குத்தாலம் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், வியாழக்கிழமை திருவாலங்காடு கடைவீதியில் உள்ள கடைகளில் ராமலிங்கம், அரிவாளுடன் சென்று மாமூல் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில், குத்தாலம் காவல் நிலைய ஆய்வாளர் சுகுணா, உதவி ஆய்வாளர் அம்புரோஸ் ஆகியோர் வழக்குப் பதிந்து, ராமலிங்கத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT