நாகப்பட்டினம்

மர்ம காய்ச்சலால் இளைஞர் சாவு

DIN

மர்ம காய்ச்சல் காரணமாக, தஞ்சை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த  இளைஞர் சனிக்கிழமை உயிரிழந்தார். 
நாகை மாட்டம், திருமருகல் ஊராட்சி ஒன்றியம் திட்டச்சேரியை அடுத்துள்ள ப.கொந்தகை கிராமம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் ஹரிஹரசுதன் (24). இவருக்கு மர்ம காய்ச்சல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், கடந்த நவ. 3-ஆம் தேதி நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற சென்ற ஹரிஹரசுதன், மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் தீவிர சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பின்னர், நவ.4-ஆம் தேதி முதல் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த ஹரிஹரசுதன் சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை  இரவு உயிரிழந்தார். இந்நிலையில், பன்றிக் காய்ச்சல் பாதிப்பால் ஹரிஹரசுதன் உயிரிழந்ததாக ப.கொந்தகை பகுதி மக்களிடையே அச்சம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, திட்டச்சேரி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் திட்டச்சேரி மற்றும் ப.கொந்தகை உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

SCROLL FOR NEXT