நாகப்பட்டினம்

ஏப். 16-இல் குடும்ப அட்டைகள் ஒப்படைப்புப் போராட்டம்: சிபிசிஎல் தொழிலாளர்கள் திட்டம்

DIN


நாகை சிபிசிஎல் ஒப்பந்தத் தொழிலாளர்கள், குடும்ப அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 16)  ஈடுபடத்
திட்டமிட்டுள்ளனர்.
நாகை சிபிசிஎல் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் பணிப் பாதுகாப்புக்கு, சிபிசிஎல் நிர்வாகம் எழுத்துப்பூர்வமான உறுதியை அளிக்க வலியுறுத்தி, வரும் மக்களவைத் தேர்தலைப் புறக்கணிக்க உள்ளதாக சிபிசிஎல் ஒப்பந்தத் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே கோரிக்கையை வலியுறுத்தி, சிபிசிஎல் ஒப்பந்தத் தொழிலாளர்கள் வரும் 16-ஆம் தேதி தங்கள் குடும்ப அட்டைகளை நாகை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சிபிசிஎல் ஒப்பந்தத் தொழிலாளர்கள் நலச் சங்கம் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT