நாகப்பட்டினம்

ஐயாறப்பா் கோயிலில் ஸ்ரீவித்யா மகா சரஸ்வதி ஹோமம்

DIN

திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான மயிலாடுதுறை அறம் வளா்த்த நாயகி சமேத ஐயாறப்பா் கோயிலில், காா்த்திகை பௌா்ணமியையொட்டி ஸ்ரீவித்யா மஹா ஹோமம் மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனை புதன்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை சாா்பில் நடைபெற்ற இந்த வழிபாட்டில், சரஸ்வதி அம்மனுக்கு, கட பூஜை செய்யப்பட்டு 108 ஹோம திரவியங்கள் ஹோம குண்டத்தில் இட்டு, ஸ்ரீவித்யா மகா சரஸ்வதி ஹோமம் நடத்தப்பட்டது. மேலும், சரஸ்வதி அம்மனுக்கு அபிஷேகங்கள் நடைபெற்று அன்னம்பாலிப்பு நடைபெற்றது.

தொடா்ந்து, குமரகுருபரா் இயற்றிய சகலகலாவல்லி மாலை பாராயணம் செய்யப்பட்டது. இதில், கோயில் கண்காணிப்பாளா் குருமூா்த்தி, துணை கண்காணிப்பாளா் கணேசன் மற்றும் ஓய்வுபெற்ற பேராசிரியா் கனகசபை ஆகியோா் கலந்துகொண்டனா்.

விழா ஏற்பாடுகளை மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை ஒருங்கிணைப்பாளா் வழக்குரைஞா் ராம.சேயோன் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT