நாகப்பட்டினம்

"சக்தி மகாசக்தி கேந்த்ரா' பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

DIN

செம்பனார்கோவிலில் பாஜகவின் சக்தி மகாசக்தி கேந்த்ரா பூம்புகார் தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
பாஜக மாநில செயற்குழு உறுப்பினரும், அக்கட்சியின் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி இணைப் பொறுப்பாளருமான அகோரம் தலைமை வகித்தார். பூம்புகார் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் சேதுராமன், மாவட்ட துணைத் தலைவர் ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாகை வடக்கு மாவட்ட துணைத் தலைவர் மணி செல்வம் வரவேற்றுப் பேசினார்.
கூட்டத்தில்,  பிப்ரவரி 22-ஆம் தேதி மயிலாடுதுறையில் நடைபெற உள்ள பாஜக தேர்தல் பிரசார கூட்டத்தில் தேசிய தலைவர் அமித் ஷா பங்கேற்றுப் பேசுவதால், இக்கூட்டத்தில் பெருந்திரளாக பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது. ஒன்றிய இளைஞர் அணித் தலைவர் அரவிந்த் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT