நாகை மாவட்டம், கீழ்வேளூர் அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து பெண் உயிரிழந்தார்.
திருவாரூர் மாவட்டம், குளிக்கரை, சந்திரசேகரன் பேட்டைத் தெருவைச் சேர்ந்த குமரேசன் என்பவரது 2-ஆவது மனைவி ராமு (45). இவர், ஞாயிற்றுக்கிழமை அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். திருவாரூர்-நாகை சாலையில் கீழ்வேளூரை அடுத்த சங்கமங்கலம் பகுதியில் சென்றபோது, இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த ராமு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கீழ்வேளூர் போலீஸார் வழக்குப்பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.