திருக்கடையூரில் பயிர்க் காப்பீட்டுத் தொகையை வழங்கக் கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருக்கடையூர் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, விவசாய சங்க வட்டத் தலைவர் ஜெகதீசன் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் சண்முகம் முன்னிலை வகித்தார். மாவட்டப் பொருளாளர் ராசையன் கண்டன உரையாற்றினார். இதில், 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர். விவசாயிகள் சங்க வட்டக்குழு உறுப்பினர் நாராயணசாமி நன்றி கூறினார்.
பொறையாறு காவல் ஆய்வாளர் ஜெகதீஸ்வரன், உதவி ஆய்வாளர் நடராஜன் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.