நாகப்பட்டினம்

பயிர்க் காப்பீடு: விவசாயிகள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

DIN

திருக்கடையூரில் பயிர்க் காப்பீட்டுத் தொகையை வழங்கக் கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருக்கடையூர் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, விவசாய சங்க வட்டத் தலைவர் ஜெகதீசன் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் சண்முகம் முன்னிலை வகித்தார். மாவட்டப் பொருளாளர் ராசையன் கண்டன உரையாற்றினார். இதில், 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர். விவசாயிகள் சங்க வட்டக்குழு உறுப்பினர் நாராயணசாமி நன்றி கூறினார்.
பொறையாறு காவல் ஆய்வாளர் ஜெகதீஸ்வரன், உதவி ஆய்வாளர் நடராஜன் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

கனடா சாலை விபத்தில் இறந்த இந்திய தம்பதி அடையாளம் தெரிந்தது

SCROLL FOR NEXT