எம்ஜிஆர் பிறந்த நாள்
திருக்கடையூர் அருகேயுள்ள ஆக்கூரில் ஞாயிற்றுக்கிழமை எம்ஜிஆரின் 102-ஆவது பிறந்த நாள் விழா நடைபெற்றது.
திருக்கடையூர் அருகேயுள்ள ஆக்கூரில் ஞாயிற்றுக்கிழமை எம்ஜிஆரின் 102-ஆவது பிறந்த நாள் விழா நடைபெற்றது.
செம்பனார்கோவில் அதிமுக வடக்கு ஒன்றியம் சார்பில் நடைபெற்ற விழாவில், பூம்புகார் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் எஸ். பவுன்ராஜ் கலந்துகொண்டு எம்ஜிஆரின் சாதனைகள் குறித்து பேசினார். இதில், செம்பனார்கோவில் அதிமுக வடக்கு ஒன்றியச் செயலர் சுந்தரராஜன், முன்னாள் எம்எல்ஏக்கள் விஜயபாலன், ரெங்கநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.