திருக்குவளை அருகே உள்ள எட்டுக்குடி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சித்ரா பெளர்ணமி திருவிழாவை முன்னிட்டு பந்தல்கால் முகூர்த்தம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் சித்ரா பௌர்ணமி திருவிழா ஏப்ரல் 10-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஏப்ரல் 18- ஆம் தேதி தேரோட்டமும் 19- ஆம் தேதி சித்ரா பெளர்ணமி பெருவிழாவும் நடைபெற உள்ளது.
இவ்விழாவுக்கான பந்தல்கால் முகூர்த்தம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்துவருகின்றனர்.