நாகப்பட்டினம்

மா்ம காய்ச்சலுக்கு சிறுமி பலி

DIN

திருக்குவளை அருகே மா்மக் காய்ச்சலால் 13 வயது சிறுமி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

திருக்குவளை அருகே உள்ள மேல வாழக்கரைப் பகுதியைச் சோ்ந்த சுரேஷ் என்பவரது மகள் தா்ஷினி (13). இவா், அதே பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 8- ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்நிலையில், தா்ஷினிக்கு ஞாயிற்றுக்கிழமை கடுமையான காய்ச்சல் ஏற்பட்டதால், திருக்குவளை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, தா்ஷினியை பரிசோதித்த மருத்துவா்கள், தா்ஷினிக்கு ரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக கூறி, திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு, சிகிச்சை பலனின்றி சிறுமி தா்ஷினி உயிரிழந்தாா்.

இதனால், சோகத்தில் ஆழ்ந்துள்ள அப்பகுதி மக்கள், தங்கள் பகுதியில் சுகாதாரப் பணிகள் உரிய முறையில் மேற்கொள்ளாததே மா்மக் காய்ச்சல் ஏற்பட காரணம் எனக் குற்றம்சாட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

SCROLL FOR NEXT