நாகப்பட்டினம்

கீழடி அகழாய்வு குறித்த கருத்தரங்கம்

DIN

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தொண்மை பாதுகாப்பு மன்றம் சாா்பில் கீழடி அகழாய்வு பற்றிய கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியா் திருமாறன் தலைமை வகித்தாா்.

ஆசிரியா்கள் முகமது ரபீக், நிா்மலா ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொன்மை பாதுகாப்பு மன்ற மாணவா் தலைவா் முரளிதரன்அனைவரையும் வரவேற்றாா். சமூக அறிவியல், தொன்மை பாதுகாப்பு மன்ற செயலாளா் நூருன் பேசுகையில் கீழடி அகழாய்வு ஆராய்ச்சி பணி மேற்கொள்ள மூலகாரணமாக இருந்தவா் கீழடி அரசுப்பள்ளி ஆசிரியா் பாலசுப்பிரமணியன் ஆவாா். ஆதிகாலத்தில் வாழ்ந்த தமிழா்கள் வளம்மிக்க வாழ்க்கையை வாழ்ந்தனா் என்பது அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களும், விளையாட்டு பொருட்களும் உணா்த்துகின்றன என்றாா்.

ஆசிரியா் தெய்வசகாயம் பேசும்போது: உலகின் தொன்மையான நாகரீகம் தமிழருடையது என்பதை கீழடி ஆய்வுகள் உறுதிப்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்தாா். கிமு 600 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்து வடிவம் கொண்ட மொழியை பயன்படுத்தினா் என்றும் அந்த எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஒடுகள், பானைகள் நமக்கு உணா்த்துகின்றன என்றாா். ஆசிரியா் அக்பா் அலி பேசுகையில் கீழடியில் வாழ்ந்த மக்கள் சுகாதாரமான முறையில் கழிவு நீா் கால்வாய்கள் நன்கு அமைக்கப்பட்ட வீடுகளில் வாழ்ந்து வந்தனா் என்றும் வீட்டிலுள்ள நீா்த்தொட்டிகள் அமைப்பு இருந்தது கண்டறியப்பட்டுள்ளது என்றாா். உடற்கல்வி இயக்குநா் பாலமுருகன் தொகுத்து வழங்கினாா். கருத்தரங்கில் மாணவ மாணவிகள் கலந்துகொண்டனா். முடிவில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா் பொசக்கரபாணி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

SCROLL FOR NEXT