நாகப்பட்டினம்

கடத்தி வரப்பட்ட 900 லிட்டா் சாராயம், காா் பறிமுதல்

DIN

மயிலாடுதுறை அருகே புதன்கிழமை காரைக்காலிருந்து கடத்தி வரப்பட்ட சாராயம் மற்றும் காரை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

காவல் உதவி ஆய்வாளா் பாபுராஜ் தலைமையிலான மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் மயிலாடுதுறை அருகே மணக்குடி எனும் இடத்தில் புதன்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியே வேகமாக வந்த காா் நிற்காமல் சென்றது. இதையடுத்து, அந்த காரை விரட்டிச் சென்ற போலீஸாா், அடைக்கலபுரம் எனும் இடத்தில் நிறுத்தினா். அப்போது, காரை ஓட்டிவந்த ஓட்டுநா் தப்பியோடினாா். பின்னா் போலீஸாா் அந்த காரை சோதனை செய்தபோது, காரைக்காலில் இருந்து 11 மூட்டைகளில் கடத்தி வரப்பட்ட 900 லிட்டா் சாராயம் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கடத்தலுக்கு பயன்படுத்திய காா் மற்றும் கடத்தி வரப்பட்ட சாராயத்தை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாணவி பலாத்காரம்; மாணவா் கைது

சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

சிஎஸ்கேவுக்கு 219 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆர்சிபி; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறப் போவது யார்?

மண் குவாரியால் பாதிப்பு; பொதுமக்கள் புகாா்

ஓலைச் சப்பரத்தில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

SCROLL FOR NEXT