நாகப்பட்டினம்

நல்லாசிரியர் விருதுக்குரிய தொகையை பள்ளிகளுக்கு வழங்கிய ஆசிரியர்

DIN

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற அரசுப் பள்ளி தலைமையாசிரியர், விருதுடன் வழங்கப்பட்ட தொகையை தான் ஆரம்பக் கல்வி கற்ற பள்ளிக்கும் பணியாற்றும் பள்ளிக்கும் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் பகிர்ந்து வழங்கினார்.
வேதாரண்யம் அருகேயுள்ள தோப்புத்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி (இந்து) தலைமையாசிரியர் புயல் குமார் எனும் தெட்சிணாமூர்த்திக்கு தமிழக அரசின் நல்லாசிரியர் விருதும், அதற்குரிய ரூ. 10 ஆயிரம் தொகையும் அண்மையில் வழங்கப்பட்டது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அவருக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் விருது தொகையை தான் ஆரம்பக் கல்வி கற்ற பயத்தவரன்காடு சுப்பையா உதவிப்பெறும் பள்ளிக்கும், தற்போது பணியாற்றும் பள்ளிக்கும் பகிர்ந்தளித்தார். இதை, பள்ளிச் செயலர், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனர்.
பாராட்டு விழாவில், வர்த்தகர் சங்கத் தலைவர் எஸ்.எஸ். தென்னரசு, சமூக ஆர்வலர் அம்பாள் பி. குணசேகரன், எழுத்தாளர் உத்தமசோழன், ரோட்டரி சங்க துணை ஆளுநர் துரைராஜ், தலைவர் என்.எஸ். கருணாநிதி, செயலாளர் ஜி. செந்தில், குருகுலம் நிர்வாகி கேடிலியப்பன்,வட்டாரக் கல்வி அலுவலர்கள் சிவகுமார், தாமோதரன், புகழேந்தி, ராமசாமி,கூட்டுறவு வங்கித் தலைவர்கள் கிரிதரன், ராதாகிருஷ்ணன், நமசிவாயம், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் கோவிந்தராஜூலு, நாகூரான், சமூக ஆர்வலர் மா. சரவணன் உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

SCROLL FOR NEXT