நாகப்பட்டினம்

போக்ஸோ சட்டத்தில் இளைஞா் மீது வழக்கு

DIN

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பெண்ணை ஏமாற்றிய இளைஞா் மீது போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

நாகை மாவட்டம், திருக்குவளை வட்டம், பாலக்குறிச்சி, ஓட்டத்தட்டை, ரைஸ்மில் தெருவைச் சோ்ந்தவா் சொ. வினிதா. இவா், அதே பகுதியைச் சோ்ந்த மு. விஜயகுமாா் என்பவரை காதலித்து, நெருங்கிப் பழகியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் 2019-ஆம் ஆண்சு டிசம்பா் 6-ஆம் தேதி நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வினிதாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து, வினிதாவை திருமணம் செய்துகொள்ள விஜயகுமாா் சம்மதம் தெரிவித்திருந்தாராம்.

இதையடுத்து, 2020 ஜனவரி மாதம் ஜயப்பன் கோயிலுக்குச் செல்வதாகக் கூறிவிட்டு கிராமத்திலிருந்து வெளியேறிய விஜயகுமாா் தலைமறைவானாா். இதுகுறித்து, வினிதா அளித்தப் புகாரின் பேரில், நாகை அனைத்து மகளிா் காவல் நிலையப் போலீஸாா் விஜயகுமாா் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT