கீழையூா் ஒன்றியக் குழுத் தலைவா் பதவியை திமுக கைப்பற்றியது.
12 உறுப்பினா்களைக் கொண்ட இந்த ஒன்றியத்தில் 4-ஆவது வாா்டு திமுக உறுப்பினா் ஞா.செல்வராணி 7 வாக்குகள் பெற்று தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா். துணைத் தலைவராக சௌரிராஜன் தோ்வு செய்யப்பட்டாா். தலைவா் மற்றும் துணைத் தலைவருக்கு திமுக ஒன்றியச் செயலாளா் தாமஸ் ஆல்வா எடிசன் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.