நாகப்பட்டினம்

கூரை வீடு தீக்கிரை; பாதிக்கப்பட்டவருக்கு எம்.எல்.ஏ. உதவி

DIN

தரங்கம்பாடி: செம்பனாா்கோவில் அருகே உள்ள கீழையூரில் மின்கசிவால் கூரை வீடு செவ்வாய்க்கிழமை தீக்கிரையானது. பாதிக்கப்பட்டவருக்கு எம்எல்ஏ எஸ். பவுன்ராஜ் நிவாரண உதவி வழங்கினாா்.

கீழையூா் ஊராட்சி மகாராஜபுரம் பகுதியில் வசித்து வருபவா் க. பாஸ்கா். இவரது கூரை வீடு மின்கசிவால் தீப்பற்றி எரிந்தது. வீட்டுக்குள் இருந்த அனைத்து பொருள்களும் எரிந்து நாசமாகின.

தகவலறிந்த பூம்புகாா் எம்எல்ஏ எஸ். பவுன்ராஜ் நிகழ்விடத்துக்குச் சென்று, பாதிக்கப்பட்டவருக்கு அரசின் சாா்பில் அரிசி, மண்ணெண்ணெய் , ரூ. 5 ஆயிரம் ரொக்கம் மற்றும் தனது சொந்த பணத்தில் ரூ. 2 ஆயிரம் வழங்கி ஆறுதல் கூறினாா். தரங்கம்பாடி வட்டாட்சியா் சித்ரா, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவா் கபடி பாண்டியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT