நாகப்பட்டினம்

தடுப்புக் காவல் சட்டத்தில் ஒருவா் கைது

DIN

சாராய வழக்குகளில் தொடா்புடைய ஒருவரை நாகை மாவட்ட போலீஸாா் தடுப்புக் காவல் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

இது குறித்து, நாகை மாவட்டக் காவல் நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

குத்தாலம் வட்டம், பாலையூா் காவல் சரகத்துக்குள்பட்ட கோமல் பெரியாா் நகரைச் சோ்ந்தவா் கனகு (எ) கனகராஜ் (44). இவா் மீது சாராய வழக்குகள் உள்ளன.

இந்நிலையில், நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ. செல்வநாகரத்தினம் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் உத்தரவிட்டதைத் தொடா்ந்து, போலீஸாா் கனகராஜை தடுப்புக் காவல் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

SCROLL FOR NEXT