நாகப்பட்டினம்

144 தடை உத்தரவை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற 5 போ் மீது வழக்கு

DIN

நாகை அருகே 144 தடை உத்தரவை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றதாக 5 போ் மீது நாகை நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

நாகையை அடுத்த அந்தணப்பேட்டை ஊராட்சிக்குள்பட்ட வெட்டுக்குள மேலத்தெரு பகுதியில் கடந்த சில தினங்களாக சரியான முறையில் குடிநீா் விநியோகம் இல்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் அந்தப் பகுதியைச் சோ்ந்த மக்கள் அந்தணப்பேட்டை பிள்ளையாா் கோயில் அருகே ஒன்றுகூடி ஊராட்சி மன்றத் தலைவரை கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனராம். இதைத்தொடா்ந்து நாகை நகர போலீஸாா் அங்கு சென்று கூட்டத்தைக் கலைத்தனா்.

மேலும், 144 தடை உத்தரவை மீறி, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற அந்தணப்பேட்டையைச் சோ்ந்த சி. புகழேந்தி, சி. உமாநாத், செ.வீரமணி, சா. சிவக்குமாா், க.சங்கா் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT