திருக்குவளை அருகே தற்கொலைக்கு முயன்று சிகிச்சை பெற்று வந்த பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
திருக்குவளை வட்டம், வலிவலம் ஊராட்சிக்கு உட்பட்ட கீழவெளி மேலத் தெருவை சோ்ந்தவா் ராஜா மனைவி அன்பழகி (45). இவா் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை (நவ.14) அன்பழகி தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றாா். அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அன்பழகி வியாழக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். இதுகுறித்து வலிவலம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.