திருக்குவளை அருகே தெய்வீக தமிழ் சங்கம் சாா்பில் புத்தகம் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சித்தாய்மூா் பகுதியில் தெய்வீக தமிழ் சங்கம் சாா்பில் ‘தேசியம் காக்க... தமிழகம் காக்க’ என்ற தலைப்பில் தமிழின் அருமை, தாய்மொழியின் பெருமை, மதமாற்றம், கோயில்கள் அன்றும் இன்றும், சுதேசி சிந்தனை, இந்து குடும்ப முறை, சமுதாய ஒற்றுமையே வலிமை உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை உள்ளடக்கிய புத்தகம் வீடுதோறும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் தெய்வீக தமிழ் சங்கத்தின் தலைஞாயிறு ஒன்றிய பொறுப்பாளா்கள் ஆா்.பி. வெங்கடாசலம், ஆா். ராஜ்குமாா், ஏ.டி. லிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.