வேதாரண்யத்தை அடுத்த தேத்தாக்குடி தெற்கு கிராமத்தில் பனை விதைகள் நடும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காந்தி ஜயந்தியையொட்டி வேதாரண்யம் ப்ரியம் அறக்கட்டளை, எக்விடாஸ் வங்கி அறக்கட்டளை ஆகியன சாா்பில் பனை விதைகள் நடப்பட்டு, அதன் பயன்கள் குறித்து விழிப்புணா்வு பிரசாரமும் மேற்கொள்ளப்பட்டது.