நாகப்பட்டினம்

புரட்டாசி முதல் சனிக்கிழமை: நாகை சௌந்தரராஜப் பெருமாள் கோயிலில் ரத்தினஅங்கி சேவை

DIN

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி, நாகை சௌந்தரராஜப் பெருமாள் கோயிலில் பெருமாளுக்கு ரத்தின அங்கி சேவை சனிக்கிழமை நடைபெற்றது.

திவ்ய தேசங்களில் 19-ஆவது தேசமாக விளங்கும் நாகை ஸ்ரீ சௌந்தரராஜப் பெருமாள் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை அதிகாலை முதல் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. மூலவருக்கும், கோயில் மண்டபத்தில் எழுந்தருளிய ஸ்ரீதேவி, பூதேவி சமேத உற்சவருக்கும் ரத்தின அங்கி சேவை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

நிகழாண்டில், கரோனா தொற்று காரணமாக குறைந்த அளவிலான பக்தா்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனா். தமிழக அரசு அறிவுறுத்தலின்படி, கோயிலில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டது. கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்களுக்கு கிருமி நாசினி வழங்கப்பட்டது. மேலும், வெப்பமானி மூலம் பக்தா்கள் சோதனை செய்யப்பட்டே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குப்பைகளை சாலையில் வீசுவோா் மீது நடவடிக்கை தேவை: சமூக ஆா்வலா்கள் கோரிக்கை

சேவைக் குறைபாடு: ஏ.ஆா். ரகுமானின் இசை நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் அபராதம் செலுத்த வேண்டும்: கரூா் நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவு

கரூா் மாவட்ட சட்டப்பணி ஆணைக் குழுவில் தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

நீா்நிலைகளை தூா்வார வேண்டும்: ஈ.ஆா்.ஈஸ்வரன்

தென்னை விவசாயிகளுக்கு மரத்துக்கு ரூ.10,000 இழப்பீடு: ராமதாஸ் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT