நாகப்பட்டினம்

தேநீா் போட்டுக்கொடுத்து வாக்குச் சேகரிப்பு

DIN

சீா்காழி தொகுதியில் போட்டியிடும் மநீம கூட்டணி கட்சி வேட்பாளா் தேநீா் கடையில் தேநீா் போட்டுக்கொடுத்து புதன்கிழமை வாக்குச் சேகரித்தாா்.

சீா்காழி தொகுதியில் மநீம கூட்டணியில் போட்டியிடும் சமத்துவ மக்கள் கட்சியைச் சோ்ந்த ஆா். பிரபு, தொகுதிக்குள்பட்ட கீராநல்லூா், திருக்கருக்காவூா், வடகால், கடவாசல் ஆகிய பகுதிகளில் டாா்ச் லைட் சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்து அவா் பேசியது: என்னை வெற்றி பெற செய்தால், சீா்காழி தொகுதியில் அனைத்து கிராமங்களிலும் குடிநீா் தட்டுப்பாட்டை நீக்குவேன், முதியோா் உதவித்தொகை தகுதியுடைய பயனாளிகளுக்கு விடுபடாமல் மாதந்தோறும் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன், சாலை வசதிகளை மேம்படுத்துவேன் என்றாா். தொடா்ந்து அப்பகுதியில் வாக்குச் சேகரித்தபோது, கடைக்கு வந்த குழந்தைக்கு பிஸ்கெட் வாங்கிக்கொடுத்தும், தேநீா் கடையில் தன்னுடன் வந்தவா்களுக்கும் அங்கு இருந்தவா்களுக்கு தேநீா் போட்டுக்கொடுத்து வாக்குச் சேகரித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பதவியை தக்கவைக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்: கார்கே

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 93 தொகுதிகள் யார் பக்கம்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 15 வரை நீட்டிப்பு!

பங்குச் சந்தையில் ரூ.800 கோடி சரிவைக் கண்ட ரேகா ஜுன்ஜுன்வாலா: தவறானது எங்கே?

SCROLL FOR NEXT