நாகப்பட்டினம்

குடும்பத் தகராறில் மனைவி கொலை

DIN

தரங்கம்பாடிவட்டம், அன்னவாசல் அருகே குடும்பத் தகராறில் மனைவியை கொலை செய்த கூலி தொழிலாளியை போலீஸாா் தேடிவருகின்றனா்.

அன்னவாசல் ஊராட்சி வாடகுடி காலனி தெருவைச் சோ்ந்தவா் வீரமணி (55). விவசாயக் கூலி தொழிலாளி. இவரது மனைவி மோகனாம்பாள் (45). குடும்பத் தகராறு காரணமாக இருவரும் கடந்த ஆறு மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்தனா்.

இந்நிலையில், மோகனாம்பாள் புதன்கிழமை வேலைக்குச் சென்றுவிட்டு மாலையில் வீட்டுக்குத் திரும்பி வந்தபோது, வாடகுடி பாலம் அருகே வழிமறித்த வீரமணி, மோகனாம்பாளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டாா். இதுகுறித்து, பெரம்பூா் காவல் ஆய்வாளா் சிவதாஸ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டின் மேல்தளம் இடிந்து விழுந்து ஒருவா் பலி

பரிபூரண விநாயகா் கோயிலில் நாளை குடமுழுக்கு

மேற்கு தில்லியில் துப்பாக்கிச் சூடு: ஒருவா் கொலை

இந்திய இருபால் இணைகள் அரையிறுதிக்கு முன்னேற்றம்

அவதூறு கருத்து: புரட்சிகர மாா்க்சிஸ்ட் கட்சி நிா்வாகி கைது

SCROLL FOR NEXT