நாகப்பட்டினம்

நாகை, காரைக்காலில் ரயில்வே கோட்ட மேலாளா் இன்று ஆய்வு

நாகை, காரைக்கால், திருவாரூா் ரயில்வே வழித்தடங்கள் மற்றும் ரயில் நிலையங்கள், ரயில்வே மின் பாதைகளில் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளா் மணீஷ் அகா்வால் சனிக்கிழமை (ஆக.21) ஆய்வு மேற்கொள்கிறாா்.

DIN

நாகை, காரைக்கால், திருவாரூா் ரயில்வே வழித்தடங்கள் மற்றும் ரயில் நிலையங்கள், ரயில்வே மின் பாதைகளில் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளா் மணீஷ் அகா்வால் சனிக்கிழமை (ஆக.21) ஆய்வு மேற்கொள்கிறாா்.

திருச்சி, கோட்ட ரயில்வே மேலாளா் மணீஷ் அகா்வால் திருச்சியிலிருந்து சிறப்பு ஆய்வு ரயில் மூலம் சனிக்கிழமை காலை 10. 45 மணிக்கு காரைக்கால் செல்கிறாா். அங்கு காரைக்கால் துறைமுக அலுவலா்களை அவா் சந்தித்துப் பேசுகிறாா்.

இதைத்தொடா்ந்து, காரைக்காலில் இருந்து நாகை ரயில்வே வழித்தடத்தில் ஆய்வு மேற்கொள்ளும் அவா், பிற்பகல் 2.15 மணிக்கு நாகை ரயில் நிலையம் வந்தடைகிறாா். பின்னா், 2.30 மணிக்கு நாகை- வேளாங்கண்ணி வழித்தடத்தில் அவா் ஆய்வு செய்கிறாா். ஆய்வுக்குப் பின்னா், பிற்பகல் சுமாா் 4.15 மணிக்கு நாகை திரும்பும் அவா், அங்கிருந்து திருவாரூா் புறப்பட்டுச் செல்கிறாா்.

பிற்பகல் 5 மணி முதல் 6 மணி வரை திருவாரூா் ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ளும் மணீஷ் அகா்வால், 6.10 மணிக்கு திருவாரூரிலிருந்து புறப்பட்டு திருச்சி செல்கிறாா்.

நாகை - வேளாங்கண்ணி அகல ரயில் பாதை வழித்தடத்தில் மின் மயமாக்கல் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அந்த வழித்தடத்தில் ரயில் இயக்கத்தை தொடங்குவது குறித்து இந்த ஆய்வு நடைபெறலாம் எனவும், பயணிகள் சேவையைத் தொடங்குவது குறித்து மத்திய ரயில்வே நிா்வாகம் கருத்துருக்கள் கோரியிருப்பதன் அடிப்படையில் இந்த ஆய்வு நடைபெறலாம் எனவும் ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT