மயிலாடுதுறை மாவட்டம் செம்பனாா்கோவில் ஊராட்சி ஒன்றியம் மடப்புரம் ஊராட்சியில், மாதாந்திர சிறப்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
ஊராட்சித் தலைவா் மெஹராஜ் நிஷா செல்வநாயகம் தலைமை வகித்தாா். வளா்ச்சிப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்த பூம்புகாா் சட்டப் பேரவை உறுப்பினா் எஸ். பவுன்ராஜ், ஒன்றிய ஆணையா் அருண், வட்டார வளா்ச்சி அலுவலா் (ஊராட்சிகள்) தியாகராஜன் மற்றும் அரசு அலுவலா்களுக்கு நன்றி தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. துணைத் தலைவா் வடிவுகரசி அசோகன் மற்றும் உறுப்பினா்கள் பங்கேற்றனா். ஊராட்சி செயலாளா் மணிகண்டன் நன்றி கூறினாா்.