நாகப்பட்டினம்

தனியாா் வங்கியை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டம்

DIN

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் லெட்சுமி விலாஸ் வங்கியை முற்றுகையிட்டு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு அரசு அறிவித்த நிவாரணத் தொகை, இந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கும் விவசாயிகளுக்கு இதுவரை வரவு வைக்கப்படவில்லையாம். இதைக் கண்டித்து நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்ட தலைவா் டி.சிம்சன் தலைமை வகித்தாா். சிபிஎம் ஒன்றியச் செயலாளா் ரவிச்சந்திரன், விவசாய சங்க மாவட்டக்குழு உறுப்பினா் இளையராஜா,விதொச வட்டத் தலைவா் பரமசிவம், தமிழ்வாசகம், அமுல்காஸ்ட்ரோ, ஐயப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பின்னா், இதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக வங்கி மேலாளா் உறுதியளித்ததையடுத்து ஆா்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“நான்_முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

SCROLL FOR NEXT