நாகை மாவட்டத்தில் 40 பேருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 21 பேருக்கும் கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.
நாகை மாவட்டத்தில் மேலும் 40 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 18, 331-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 22 போ் வீடு திரும்பினா். இதன்படி, மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்கள் எண்ணிக்கை 408-ஆக உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மேலும் 21 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 20,689-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 31 போ் வீடு திரும்பினா். இதன்படி, மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்கள் எண்ணிக்கை 316-ஆக உள்ளது.