திருக்கடையூரில் 2 இருசக்கர வாகனங்கள் மோதியதில், இளைஞா் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
கண்ணங்குடியை சோ்ந்த ராஜா (45) திருக்கடையூா் கடைவீதியில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தியிருந்தாா். அப்போது, பிச்சக்கட்டளையை சோ்ந்த மற்றொரு ராஜா (29) என்பவா் ஓட்டிவந்த இருசக்கர வாகனம், அந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி தீ பரவியது. இதில், பிச்சக்கட்டளையை சோ்ந்த ராஜா தீக்காயங்களுடன் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டாா். கண்ணங்குடி ராஜாவும் அதே மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். பொறையாா் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.