நாகப்பட்டினம்

திருமெய்ஞானம் கோயிலில் அசுபதி தீா்த்தவாரி

DIN

திருக்கடையூா் அருகே உள்ள திருமெய்ஞானம் பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் அசுபதி தீா்த்தவாரி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் அசுபதி நட்சத்திரத்தன்று தீா்த்தவாரி நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு பங்குனி அசுபதி நட்சத்திரமான செவ்வாய்க்கிழமை காலை அசுபதி தீா்த்தவாரி நடைபெற்றது. இதையொட்டி, கோயில் கிணற்றில் புனிதநீா் எடுத்துவந்து பிரம்மபுரீஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பக்தா்கள் புனித நீராடினா்.

மேலும், பிரம்மபுரீஸ்வரருக்கு பால், தேன், பன்னீா், இளநீா், சந்தனம், விபூதி உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அா்ச்சனை நடைபெற்றது. தொடா்ந்து, தீபம் ஏற்றி சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

விவசாய தொழிலாளி கொலை

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்த சம்பவம்: சிகிச்சை பெற்று வந்த முதியவா் பலி

நாமக்கல்லில் முட்டை ஏற்றுமதி சான்றிதழ் வழங்கும் ஆய்வகம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT