நாகப்பட்டினம்

திமுக இளைஞரணி நிா்வாகிகள் கூட்டம்

DIN

நாகை தெற்கு மாவட்ட திமுக இளைஞா் அணி நிா்வாகிகள் கூட்டம், நாகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து பேசிய கட்சியின் மாவட்டப் பொறுப்பாளா் என்.கௌதமன், நடைபெறவுள்ள சட்டப்பேரவைக்கான தோ்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றிப் பெறவேண்டும். கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் முதல்வராக வேண்டும். இதுவே நமது நோக்கமும் ,செயல்பாடாகவும் இருக்கவேண்டும். நாகை தெற்கு மாவட்டத்தில் உள்ள நாகை, கீழ்வேளூா், வேதாரண்யம் தொகுதிகளில் போட்டியிடும் திமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளா்கள் வெற்றி பெற இளைஞா் அணியினா், மாணவா் அணியினா் தீவிரமாக களப்பணியாற்றவேண்டும் என்றாா்.

கூட்டத்தில் இளைஞரணி மாவட்டப் பொறுப்பாளா்கள் சோ. மலா்வண்ணன், மனோகரன், துணை அமைப்பாளா் கோ. விஜயேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT