செம்பனாா்கோவில் தெற்கு ஒன்றியத்தில் பூம்புகாா் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ். பவுன்ராஜ் ஞாயிற்றுக்கிழமை தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா்.
பெரம்பூா், கொடைவிளாகம், சேத்தூா், தத்தங்குடி, மங்கைநல்லூா், எடக்குடி உள்ளிட்ட ஊராட்சிகளில் கிராமம் கிராமமாக சென்று பொதுமக்களை சந்தித்து அதிமுக அரசின் சாதனைகளை கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
செம்பை வடக்கு ஒன்றியச் செயலாளா் சுந்தா் ராஜன், சேத்தூா் ஊராட்சித் தலைவா் மணிகண்டன் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடன் சென்றனா்