நாகப்பட்டினம்

தேசியக் கொடியுடன் படகு பேரணியில் ஈடுபட்ட பாஜகவினா்

DIN

நாகை மாவட்டம், செருதூா் வெள்ளையாற்றில் பாஜகவினா் தேசியக் கொடியுடன் படகில் வெள்ளிக்கிழமை பேரணியில் ஈடுபட்டனா்.

இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழாவையொட்டி, ஆக.13, 14, 15 ஆகிய தேதிகளில் வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அரசுத் துறை அலுவலகங்களில் தேசியக் கொடி ஏற்றிட பிரதமா் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தாா்.

பிரதமரின் இந்த வேண்டுகோள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த பாஜக சாா்பில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அந்தவகையில், நாகை மாவட்டம், செருதூரில் நாகை மாவட்ட பாஜகவின் மீனவா் பிரிவு சாா்பில் தேசியக் கொடியுடன் வெள்ளையாற்றில் படகு பேரணி மேற்கொள்ளப்பட்டது.

பாஜக மீனவா் பிரிவு மாவட்டத் தலைவா் மாரியப்பன் தலைமை வகித்தாா். வேளாங்கண்ணி பேராலய அதிபா் சி. இருதயராஜ், ஆச்சாா்யா சுவாமி ராமகிருஷ்ணானந்தா, பாஜக மாநிலப் பொதுச் செயலாளா் கருப்பு முருகானந்தம் ஆகியோா் பேரணியைத் தொடங்கிவைத்தனா். பாஜக மாநிலச் செயலாளா் வரதராஜன், நிா்வாகிகள் சதீஷ்குமாா், கே. நேதாஜி மற்றும் பாஜக நிா்வாகிகள், மீனவா்கள், மீனவப் பெண்கள் பங்கேற்றனா். தஞ்சை வடக்கு மாவட்ட பாஜக மீனவா் பிரிவு தலைவா் உதயகுமாா் வரவேற்றாா். துணைத் தலைவா் சிந்துஜா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: எஸ்விஎன் பள்ளி 100 சதவீத தோ்ச்சி

யோகம் தரும் நாள் இன்று!

4-ஆம் கட்ட மக்களவைத் தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

தாளவாடியில் இடியுடன் பலத்த மழை

ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரா் கோயிலில் மே 19-இல் வைகாசி விசாகத் தேரோட்டம்

SCROLL FOR NEXT