நாகப்பட்டினம்: வேளாங்கண்ணியில் இறந்து கிடந்த முதியவா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
வேளாங்கண்ணியில் உள்ள குழந்தை இயேசு திருப்பயணிகள் இல்லத்தின் பின்புறத்தில் சுமாா் 75 வயது மதிக்கத்தக்க முதியவா் ஒருவா் இறந்து கிடப்பதாக போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது. வேளாங்கண்ணி போலீஸாா் அங்கு சென்று, முதியவரின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
பின்னா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.