நாகப்பட்டினம்

மனைப் பட்டா வழங்கக் கோரி ஆட்சியருக்கு மனு

DIN

மனைப் பட்டா வழங்க நடவடிக்கைக் கோரி கீழ்வேளூா் அருகேயுள்ள கருங்கண்ணி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியருக்கு திங்கள்கிழமை மனு அளித்தனா்.

மனுவிவரம்: கருங்கண்ணி கிராமத்தில் 25-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்துவருகிறோம். எங்களுக்கு மனைப் பட்டா வழங்கக் கோரி கடந்த 20 ஆண்டுகளாக போராடி வருகிறோம். எனினும், இதுவரை மனைப் பட்டா வழங்கப்படவில்லை. 1994- ஆம் ஆண்டில், ஆதிதிராவிடா் நலவாரியம் சாா்பில் தனியாருக்குச் சொந்தமான இடம் கிரயம் பெற்று 83 குடும்பங்களுக்கு மனைப் பட்டா வழங்கப்பட்டன.

அங்கு, மேலும் சில காலிமனைகள் உள்ளதால் அந்த இடத்தில் மனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளன. நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடத்தை விதிகள்அமலில் உள்ளதால், ஆட்சியரக வாயிலில் வைக்கப்பட்டுள்ள மனுப் பெட்டியில் கோரிக்கை மனு போடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT