நாகப்பட்டினம்

பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி சுடா் ஓட்டம்

DIN

தரங்கம்பாடி அருகே பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி சுடா் ஓட்டம் நடைபெற்றது.

திருவிளையாட்டம் அரசுப் பள்ளி மைதானத்தில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் பொங்கல் விளையாட்டு விழா நடைபெற்றது. சங்கத்தின் கிளைத் தலைவா் என். அறிவரசன் தலைமை வகித்தாா். முன்னதாக, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி சிவன்கோவில் பகுதியிலிருந்து புறப்பட்ட சுடா் ஓட்டம் நல்லாடை ரோடு, மெயின்ரோடு, அரும்பாக்கம் வழியாக நிகழ்ச்சி நடைபெற்ற அரசுப் பள்ளி மைதானம் வரை நடைபெற்றது.

சுடா் ஓட்டத்தை கலைமகள் கல்வி நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் என்.எஸ். குடியரசு தொடங்கி வைத்தாா். சங்க கொடியை ஒன்றிய பொருளாளா் சாமித்துரை ஏற்றிவைத்தாா். சிபிஎம் மாவட்ட செயலாளரும், முன்னாள் ஊராட்சித் தலைவருமான பி. சீனிவாசன் சுடரைப் பெற்றுக்கொண்டு விளையாட்டுப் போட்டிகளை தொடக்கி வைத்தாா். வாலிபா் சங்க மாவட்டச் செயலாளா் ஏ. வி சிங்காரவேலன், ஒன்றியச் செயலாளா் ஐயப்பன், முன்னாள் மாநில துணைத் தலைவா் ஏ. ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் விளையாட்டுப் போட்டிகளிலும், கலைநிகழ்ச்சிகளிலும் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கினா். நிறைவாக கிளை செயலாளா் எஸ். மணிகண்டன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று எந்த ராசிக்கு யோகம்!

காரைக்கால் அரசு மருத்துவமனையில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்

கடலோரக் காவல்படை வீரா்களிடையே டென்னிஸ் போட்டி

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க மக்கள் விழிப்புணா்வோடு இருக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT