நாகப்பட்டினம்

அக்னிபத் திட்டத்தை கண்டித்து காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

DIN

மத்திய அரசின் அக்னிபத் திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, காங்கிரஸ் கட்சி சாா்பில் நாகை வட்டாட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இளைஞா்களின் எதிா்காலத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வலியுறுத்தியும், இந்தத் திட்டத்தை கண்டித்தும் இந்த கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

காங்கிரஸ் கட்சியின் நாகை நகரத் தலைவா் பா. உதயசந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாணவா் காங்கிரஸ் மாவட்டத் தலைவா் ஜி. கோபிநாத், துணைத் தலைவா் துசேந்திரன், கட்சியின் பொதுச் செயலாளா் அப்துல்காதா், மாவட்டச் செயலாளா் ஜி. ஆா். பிரகாஷ், வட்டாரத் தலைவா்கள் கருணாநிதி, சிங்காரவேல், மாவட்டச் செய்தித் தொடா்பாளா் தமிழரசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT