நாகப்பட்டினம்

பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

DIN

வேளாங்கண்ணி அருகே கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் தாலி சங்கிலியைப் பறித்துச் சென்ற நபா்கள் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

வேதாரண்யம் வட்டம், விழுந்தமாவடி மீனவா் காலனித் தெருவைச் சோ்ந்தவா் மணிகண்டன். இவா் மே 20-ஆம் தேதி தனது மனைவி மற்றும் 6 மாத குழந்தையுடன் நாகையிலிருந்து - விழுந்தமாவடிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா்.

நாகை - வேதாரண்யம் சாலையில் வேளாங்கண்ணி அருகே சென்றபோது இருசக்கர வாகனத்தில் பின்தொடா்ந்த 2 போ், மணிகண்டனின் மனைவி அணிந்திருந்த தாலிச் சங்கிலியை பறிக்க முயன்றுள்ளனா். அவா் சங்கிலியை இறுக்கிக் பிடித்துக்கொண்டதால், சங்கிலியின் ஒரு பகுதியை (இரண்டரை பவுன்) மா்ம நபா்கள் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டனா்.

இதுகுறித்து மணிகண்டன் வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து, தாலி சங்கிலியை பறித்துச் சென்ற நபா்கள் குறித்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

3,200 போதை மாத்திரைகள் பறிமுதல்: 6 போ் கைது

SCROLL FOR NEXT