நாகப்பட்டினம்

கீழ்வேளூா் தீயணைப்பு நிலைய அலுவலருக்கு விருது

DIN

நாகை மாவட்டம், கீழ்வேளூா் தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலா் ராஜராஜசோழனுக்கு தமிழக அரசின் முதல்வா் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகை மாவட்டம், கீழ்வேளூா் காவல் சரகம், கோகூா் வெட்டாற்றங்கரை பகுதியில் மது குற்றவாளிகளைப் பிடிக்கச் சென்ற கீழ்வேளூா் காவல்நிலைய காவலா் மாஸ்கோ என்பவா், கடந்த நவம்பா் 27-ஆம் தேதி ஆற்று வெள்ளத்தில் சிக்கினாாா்.

இதுகுறித்த தகவலின் பேரில் அங்கு வந்த கீழ்வேளூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய சிறப்பு அலுவலா் இரா. ராஜசோழன், விரைந்து செயல்பட்டு, வெள்ளத்தில் சிக்கிய காவலரை மீட்டாா்.

இதன் காரணமாக, தமிழக தீயணைப்புத் துறைக்கான முதல்வா் விருது, கீழ்வேளூா் தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலா் இரா. ராஜராஜசோழனுக்கு அறிவிக்கப்பட்டு, அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருது மற்றும் ரொக்கப்பரிசு ஆகியன தமிழக முதல்வரால் அவருக்கு விரைவில் வழங்கப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான் அதிபா் ரய்சி மறைவு: பிரதமா் மோடி இரங்கல்; இந்தியாவில் ஒருநாள் துக்கம்

குமாரபாளையத்தில் கனமழை

‘சிறப்புக் குடிமக்கள்’ என கருதுவதை ஏற்க முடியாது: சிறுபான்மையினா் குறித்து பிரதமா் மோடி

பரமத்தி வேலூரில்...

ராசிபுரம் கடைவீதியில் அதிகரிக்கும் வாகன நெரிசல்

SCROLL FOR NEXT